Wednesday, June 17, 2020

பெண்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்ததே கருப்புச்சட்டைதானே!

பெண்களுக்கு இந்தத் துணிச்சலைத் தந்ததே கருப்புச்சட்டைதானே! தந்தை பெரியாரின் கொள்கைகளை அறிந்து உணர;ந்து ஏற்றுக் கொண்டவர;கள் எங்கிருந்தாலும் அதைவிட்டு மீறவோ மாறவோ முடியாது என்பதற்கு புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் நடந்த இந்த ஒரு சம்பவம் நினைவு படுத்துகிறது. கறம்பக்குடியைச் சேர;ந்தவர; பு+பதி. ஓய்வு பெற்ற தலைமையாசிரியர;. அண்மையில் மறைவுற்றார;. பகுத்தறிவுவாதியாக இருந்த அவரது மகன் கார;த்திகேயனும் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்று கருப்புச்சட்டை கார;த்திகேயன் என்ற அடைமொழியோடு இருந்து வருகிறார;. (அவர; தந்தை பெரியார; திராவிடர; கழகப் பொறுப்பாளர;) பு+பதி இறந்து விட்டதுடன் கூடிய உறவினர;கள் அவரை எரியு+ட்ட ஏற்பாடு செய்தபோது அவரது ஒரே மகனான கார;த்திகேயன்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர;. அதை மறுத்த கார;த்திகேயன் என் தந்தை கடைசிவரை பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து வந்தார;. நானும் பெரியாரின் தொண்டன். நான்தான் கொள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்த வேண்டாம், யாராவது எரித்து விட்டுப் போங்கள் என்று கூறிவிட்டார;. நாங்கள் கொள்ளி வைக்கிறோம் என்று முன் வந்த பு+பதியின் மகள்களையும் (1.தெய்வகலை, 2. திராவிடமொழி 3.சத்தியவாணி) கொள்ளி வைக்க உறவினர;கள் ஒத்துக் கொள்ளவில்லை. காரணம் என்னவென்றால் இந்தச் சம்பவத்தில் முன்னுதாரணமாக பெண்களை அனுமதித்தால் அவர;களின் உறவினர;கள், இனத்தவர; என அனைத்து பெண்களும் அந்த உரிமையை எடுத்துக் கொண்டு விட்டால் தங்களது ஆணாதிக்கத்திற்கு பங்கம் வந்து விடும் என்று கருதி பெரும் தர;க்கம் செய்தனர;. அப்போது அங்கு வந்த பு+பதியின் மனைவி தேன்மொழி என் மகள்களை அனுமதிக்காவிட்டால் பரவாயில்லை. என் கணவருக்கு நானே கொள்ளி வைக்கிறேன் என்று அவரே கொள்ளி வைத்தார;. நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின் ஒரு வழியாக உறவினர;கள் சம்மதித்தனர;. பெண்கள் சுடுகாட்டுக்கு வரக்கூடாது என்ற சடங்கை உடைத்த அந்தப் பெண் பாராட்டுக்கு உரியவரானார;. எங்கிருந்தாலும் கருப்புச்சட்டை கருப்புச்சட்டைதானே!

No comments:

Post a Comment